• Jul 25 2025

வெண்ணிலா கழுத்தில் தாலி இருப்பதைக் கண்ட சூர்யா... அதிர்ச்சியில் ஆடிப் போன மனைவி... துள்ளிக் குதிக்கும் கணவன்... 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. அதில் ஏற்கெனவே சூர்யா கட்டிய தாலி எனக் கூறி வெண்ணிலா தாலி ஒன்றினை சூர்யாவின் கையில் கழட்டிக் கொடுத்திருப்பார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா காலில் அடி படுகின்றது. அதனைப் பார்த்ததும் வெண்ணிலா அருகில் சூர்யா ஓடிச் செல்கின்றார். அப்போது வெண்ணிலாவின் கழுத்தில் தான் கட்டிய தாலி இருப்பதை சூர்யா காண்கின்றார். 


பின்னர் வெண்ணிலாவைப் பார்த்து "அன்னைக்கு என்னவோ தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டீங்க "அப்போ இது என்ன மேடம்" எனக் கேட்டு விட்டு துள்ளிக் குதித்து ஆடுகின்றார். வெண்ணிலா அதிர்ச்சியில் அங்கிருந்து செல்கின்றார்.


Advertisement

Advertisement