• Jul 25 2025

கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு நடந்த விபரீதம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. அதில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் அதே கூட்டு குடும்பத்திற்கு திரும்பி இருக்கின்றனர். இவ்வளவு ஆன பிறகும் அதே youtube சேனலுக்கு தொடர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.தற்போது ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுப்பதை பார்த்து மூர்த்தி கடும் கோபமாக பேசுகிறார்.

அவர்களுக்காக கதிர் ஏற்க்கனவே சிறைக்கு சென்று திரும்பி இருக்கும் நிலையில் தான் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். இன்னும் கடன் இருக்கிறது என்பதையும் எல்லோரிடமும் மறைத்து வருகின்றனர். தற்போது ஐஸ்வர்யா மீண்டும் வீடியோ எடுப்பதை பார்த்து மூர்த்தி கடும் கோபமாக பேசுகிறார்.

தற்போது அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் மற்றும் முல்லை இருவரும் நடந்து செல்லும்போது ஒரு பைக் மோத வருகிறது.

அப்போது முல்லை தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். கர்ப்பமாக இருக்கும் அவர் விழுந்ததால் அவருக்கு என்ன ஆகுமோ என ரசிகர்கள் தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement