• Jul 24 2025

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்- அப்போ இனி வர மாட்டாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சிரியல்களில் ஒன்று தான் தென்றல் வந்த என்னைத் தொடும். இந்த சீரியல் தொடக்கத்திலிருந்து தற்போது வரை, டாப் ரெஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில், வினோத் பாபு மற்றும் பவித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் தற்போது ஹீரோயின் கர்ப்பமாக இருப்பது போல் கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரத்திரம் விலகியுள்ளனர்.


இதில் முல்லை என்ற குழந்தை நட்சத்திரமாக ரக்ஷு பாப்பா நடித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் கமிட்டான இவர், கொஞ்ச நாட்களிலேயே அனைவரும் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது இவருக்கான கடைசி ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.


கண்ணீருடன் பிரியாவிடை பெற்று, இதிலிருந்து ரக்ஷு பாப்பா விலகி உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை, தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிரடியாக வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனால் இவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement