• Jul 26 2025

மணமேடையில் இருந்து தரதரவென பார்த்தியை இழுத்து சென்ற போலீசார்..திருமணம் நடந்ததா..பரபரப்பு திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. 

அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.அதில் ப்ரியாவின் மனசை மாற்ற ஜீவா அடிக்கடி குட்டி குட்டி ரொமான்ஸ் செய்கின்றார்.அந்த நேரம் ப்ரியா வேலை வெட்டி இல்லாதவங்க தான் இப்படி எல்லாம் செய்லாங்க என சொல்கின்றார்.


இவ்வாறுஇருக்கையில் போலீஸ் சந்தியாவிற்கு தேவி போன் பண்ணி பேசுகின்றார்.அதாவது கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கூற ...அவரும் கண்டிப்பா என்று கூறி மண்டபத்திற்கு வருகின்றார்.


அந்த நேரம் பார்த்தியும் காவியாவும் மணமேடையில் தாலி கட்டுவதற்கு ரெடியாகும் நேரம் திடீரென நிறுத்துங்கள் எனக் கூறி பார்த்தியின் சேட்டில் பிடித்து தரதரவென இழுத்து செல்கின்றார்.


எல்லோர் கேட்டும் அதைக் கேட்காது போலீஸ் ஜீப்பில் இழுத்துக் கொண்டு செல்கின்றார்.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement