• Jul 25 2025

கமல் கேட்ட அந்தக் கேள்வி... பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் ஜனனி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்டது என்றால் அது 'பிக்பாஸ்' தான். இந்த நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 6ஆவது சீசன் விறுவிறுப்பாகவும், பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் 21 பேருடன் ஆரம்பமாகி 60 நாட்களை கடந்து கண்ணீருடனும், சிரிப்புடனும் செல்லும் இந்த நிகழ்ச்சியில் வாராவாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் தான் இருக்கின்றனர். நேற்றைய தினம் ராம் வெளியேறிய நிலையில் தற்போது 12 போட்டியாளர்களே எஞ்சி உள்ளார்கள். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "இந்த வீட்டில் லக்கினால் பிழைத்துக் கொண்டு வருபவர் யார்" எனக் கமல் கேட்கின்றார். அதற்கு adk ஜனனியைக் கூறுகின்றார். அதேபோன்று ரச்சிதாவும் ஜனனியையே கூறுகின்றார். 

அதேபோன்று ஜனனி ரச்சிதாவை கூறுகின்றார். அதற்கு கமல்" நீங்க நாங்க எல்லாருமே கடின உழைப்பினால் தான் ஜெயிச்சிட்டு இருக்கோம், ரச்சிதா லக்கினால் ஜெயிச்சிட்டு இருக்காங்க என்று கூறுகின்றீர்களே, உங்க கழுத்திலேயும் ஒரு லக் கயிறு தொங்குகின்றதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" எனக் கேட்கின்றார். அதற்கு ஜனனி பதில் கூற முடியாது முழிக்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement