• Jul 25 2025

புதிய தொடரில் களமிறங்கும் 'ரோஜா' சீரியல் நாயகன் சிப்பு... அதுவும் இந்த டிவியிலா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும், இதைப் பற்றிப் பலர் கலாய்த்து கொண்டிருந்தாலும் குடும்ப ரசிகர்கள் பலர் இந்த சீரியலை விடாது தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.


இந்த சீரியலில் சிப்பு சூர்யன் மற்றும் பிரியங்கா நல்கார் ஆகிய இருவரும் முக்கிய நடிகர்களாக நடிக்க அனு மற்றும் தொகுப்பாளினி அக்ஷயா இருவரும் வில்லியாக நடித்து அசத்தி வந்தார்கள். மேலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மிக ஹிட்டாக ஓடிய இந்த தொடரானது 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி ஹிட் சீரியலாக அமைந்தது.


சமீபத்தில் இந்த சீரியலானது முடிவுக்கு வந்ததை நடிகர்கள் உறுதி செய்திருந்தனர். இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தார்கள்


இந்த நிலையில் தான் தற்போது 'ரோஜா' தொடரின் நாயகன் சிப்பு சூர்யன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது சிபு புதியதாக ஒரு தொடரில் கமிட்டாகி இருப்பதாகவும், ஆனால் அவர் இந்த முறை ஜீ தமிழில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.


Advertisement

Advertisement