• Jul 26 2025

நடிகை சமந்தாவிற்கு ஆறுதலா இருக்குறவங்களே இவங்க தான்...அவரே பதிவிட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் தான நடிகை சமச்தா.இவர்  மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதன்காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்புகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த நோய் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சகுந்தலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் அவர் பங்கேற்ற முதல் பட நிகழ்ச்சி இதுவாகும். இதனால் இந்த விழாவில் பேசும்போதும் சற்று எமோஷனல் ஆன சமந்தா கண்ணீர்விட்டு அழுதார்.

மேலும் இது ரசிகர்களை கலங்கச் செய்தது.சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாட்டிற்கும் சென்று திரும்பி இருக்கிறார் அவர்.

இவ்வாறுஇருக்கையில்  தனக்கு ஆறுதலாக தன்னுடைய செல்ல பிராணி நாய் ஹாஸ், சாஷா இருக்கிறார்கள் என்று சோஃபாவில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



Advertisement

Advertisement