• Jul 25 2025

இது எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது- பிரபல நடிகரின் மகள் எனக்கு தொல்லை கொடுக்கின்றாரா?- கடும் கோபத்தில் க்ரித்தி ஷெட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் வெளியாகிய உப்பென்னா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் க்ரித்தி ஷெட்டி.இப்படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக அறிமுகமாகினார். இதனை அடுத்து ராம் பொத்தினேனியுடன் சேர்ந்து தி வொரியர் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவருடைய நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இதனை அடுத்து தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைத்தன்யா நடிப்பில் வெளியாகியிருந்த கஸ்ரடி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்


தற்பொழுது இவர் ஜெயம் ரவி ஜோடியாக ஜீனி என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.க்ரித்தி ஷெட்டிக்கு ஒரு பிரபல ஹீரோவின் மகன் தொல்லை கொடுக்கிறார் என சமீபத்தில் ஒரு செய்தி பரவியது. அவர் எங்கு சென்றாலும் வந்து தொல்லை கொடுக்கிறார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது" என க்ரித்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement