• Jul 24 2025

'லியோ' என்று பெயர் வைக்க இதுதான் காரணமாம்.. படத்தோட முக்கிய நபரே உண்மையை சொல்லிட்டாங்கப்பா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

லியோ படத்தை பற்றி நம்ம எல்லோருக்குமே நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும். அதாவது தளபதி விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் 'லியோ'. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதுமட்டுமல்லாது ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாகவும் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்கநராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். 

இவ்வாறு இருக்கையில் படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதி இருக்கின்றனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். 


மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி ஆரம்பமானது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட லியோ படத்தின் வசனகர்த்தா ரத்ன குமார் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

இதனடிப்படையில் பத்திரிகையார்கள் "லியோ படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் ஏன் வைக்கப்பட்டது?" என்று கேள்வி ஒன்றை கேட்டனர். இந்த கேள்விக்கு "இது ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது.  அதற்கு சிறிய அளவில் எல்லாருக்கும் புரியும் வார்த்தையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது." என ரத்ன குமார் பதில் அளித்துள்ளார்

Advertisement

Advertisement