• Jul 25 2025

“ஏமாந்த பெண்கள் அதிகம்‌ இதுதான் உண்மை ..” சம்யுக்தாவின் அடுத்தடுத்த பதிவு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் சம்யுக்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  சீரியல்களில் ஒன்றான 'சிப்பிக்குள் முத்து' நடித்து அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.


இவர்களின் திருமணத்தில், பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதமே ஆகும் நிலையில்இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படத்தை நீக்கியுள்ளதால், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மாறி மாறி தமது சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது சம்யுக்தா தனது இன்ஸ்டாவில் ஒரு போஸ்டை போட்டுள்ளார்.

அதில் " பெண்களின் அழகில் ஏமாந்த ஆண்களை விட ஆண்களின் நம்பிக்கை வார்த்தையில் ஏமாந்த பெண்களே அதிகம் ..” என ஒரு பதிவை போட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவர் தனது கணவனுடனான பிரிவிற்கான காரணத்தையே இப்படி பதிவு செய்து வருகின்றார் என குறிப்பிட்டுகின்றனர்.



Advertisement

Advertisement