• Jul 25 2025

வடிவேலுவிற்கு ஆப்பு வைத்த மாண்டஸ் புயல்... சிதைந்து போன பாக்ஸ் ஆபீஸ் கனவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதாவது சுராஜ் இயக்கத்தில் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. 


மேலும் லைகா தயாரிப்பில் சந்தோஷ் நாராயாணன் இசையமைத்துள்ள இந்தப் படமானது வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மாண்டஸ் புயல் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. புயல் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்பதால், அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. 

இதன் காரணமாகவே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, வசூலிலும் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் நாளில் புயல் காரணமாக தடுமாறினாலும், அடுத்தடுத்த நாட்கள் அவருக்கு சாதகமாக இருக்குமா என சற்றுப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement