• Jul 25 2025

தாலியைக் கழட்டி சூர்யாவின் கையில் கொடுத்த வெண்ணிலா- இனி நடக்கப் போவது என்ன?- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகின்றது.

 காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

சூர்யா யாருக்கும் தெரியாமல் வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டியதால் வெண்ணில வீட்டுக்கச் சென்று பல சேட்டைகளையும் செய்திருந்தார். வெண்ணிலாவின் கழுத்தில் சூர்யா தாலி கட்டிய விடயம் சூர்யாவின் பெற்றோருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் வெண்ணிலா சூர்யா கழுத்தில் கட்டிய தாலியைக் கழட்டிக் கொண்டு வந்து சூர்யாவிடம் கொடுக்கின்றார். இதனால் சூர்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement