• Jul 25 2025

மிருகங்களை வைத்து அவர்களை டார்ச்சர் செய்யணும்- ஷகிலாவிடம் ஆக்ரோஷமாகப் பேசிய வனிதா விஜயகுமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகிய சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது திருமண வாழ்வில் அடிக்கடி பிரச்சினைகளை சந்தித்து வந்தார்.

இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் வனிதா.அப்படி நெகடிவ் விமர்சனங்களை துளிக்கூட கண்டுக்கொள்ளாத வனிதா சமீபத்தில் நடிகை ஷகிலாவின் பேட்டியில் கலந்து கொண்டு பல கருத்துக்களை கூறி வந்தார்.


 அதில் முக்கியமாக பெண்களை சீரழிக்கும் ரேப்பிஸ்ட்-களை என்ன செய்யலாம் என்று வனிதாவிடம் கேட்டார்.அதற்கு வனிதா, அவர்களை கொள்ளாமல், பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தமாதிரியான வலியை அனுபதித்தார்களோ, அதேபோல் அவர்களை கொல்லாமல் மிருகங்களை வைத்து அவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும் என்றும் கொடூரமாக ரேப் செய்ய வேண்டும் என்றும் ஓப்பனாக கூறியுள்ளார்.

இது தவிர தன்னுடைய குடும்பம் மறுபடியும் தன்னை ஒரு நாள் ஏற்றுக் கொள்ளும் என்றும் தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement