• Jul 25 2025

பர்ஸ்ட் நைட் ஏற்பாடுகளை செய்த சூர்யா... மனைவியால் காத்திருந்த ஏமாற்றம்... பயத்தில் நடுங்கிய வெண்ணிலா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யா பூக் கூடையுடன் வந்து ஆடிப்பாடி குதூகலத்துடன் பர்ஸ்ட் நைட் ஏற்பாடுகளை செய்கின்றார். திடீரென அந்த ரூமிற்குள் ரம்ளருடன் வந்த வெண்ணிலாவிடம் "ஓய் பொண்டாட்டி இது என்ன பாலா" எனக் கேட்கின்றார். மேலும் " ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கிறேன்" எனவும் கூறுகின்றேன்.


அதற்கு வெண்ணிலா முதலில் இங்கிருந்து கிளம்புங்க, போய்யா போ" எனக் கூறுகின்றார். இதனால் எதிர்பார்ப்போடு காத்திருந்த சூர்யா ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றார். அந்த சமயத்தில் வெண்ணிலாவின் அம்மா அவரைக் கூப்பிடுகின்றார். இதனால் வெண்ணிலா ஐயோ அம்மா எனக் கூறிப் பயப்படுகின்றார்.


Advertisement

Advertisement