• Jul 26 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் இணைந்த விஜே தீபிகா- மீண்டும் ஐஸ்வர்யாவாக வந்தாச்சு

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசப் போராட்டத்தை பற்றி மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்த சீரியலுக்கு பெண்கள் மத்தியில்  நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.அதுமட்டுமில்லை தொடர்ந்து நல்ல ரேட்டிங்கிலும் இருந்து வருகிறது.


 தற்போதுவரை ஆயிரம் எபிசோடிகளை கடந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பேர்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை பல்வேறு நடிகர்கள் மாற்றப்பட்டு விட்டனர். இப்போது மேலும் ஒரு நடிகை மாற்றப்பட இருக்கிறார்.


அதன்படி இந்த சீரியரில் ஐஸ்வர்யா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த சாய் காயத்திரி தான் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி அவர் கூறியதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுகிறேன். காரணம் அந்த கதாப்பாத்திரம் தற்போது எனக்கு ஏற்றதாக இல்லை. இனி சீரியலில் வரும் கதை நகர்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.


இவர் சீரியலை விலகிதைத் தொடர்ந்து யார் சீரியலில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.அதன்படி சாய்காயத்திரிக்கு முதல் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவே ஐஸ்வர்யாவாக மீண்டும் இணைந்துள்ளார்.படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement