• Jul 23 2025

காதலுக்கு பச்சைக் கொடி காட்டிய கடவுள்... சந்தோஷத்தில் பாரதி... கண்ணம்மா எடுக்கப் போகும் முடிவு என்ன..? ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பாரதி கண்ணம்மாவிடம் "நானும் நீயும் சேரனும் என்பது ஏற்கெனவே அந்தக் கடவுளால் நிச்சயிக்கப்பட்டது" எனக் கூறுகின்றார். பதிலுக்கு கண்ணம்மா "எந்த நம்பிக்கையில் நீ இப்படி எல்லாம் பேசுகிறாய்" எனக் கேட்கின்றார். 

அதற்கு பாரதி "கண்டிப்பா நடக்குதா இல்லையா என்று நீயே பாரேன்" என்கிறார். பதிலுக்கு கண்ணம்மா நீ மழை வா என்றால் வந்திடுமா எனக் கேட்கின்றார். பாரதி உடனே கடவுளே என் காதல் உண்மை என்பதை நீ தான் நிரூபிக்கணும் என வேண்டிக் கொள்கின்றார்.


பின்னர் கண்ணம்மா இதுதான் பாரதி ரியாலிட்டி, மழையும் வராது ஒண்ணும் வராது எனக் கூறிச் செல்கின்றார். அந்த சமயத்தில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்கின்றது. உடனே பாரதி "கண்ணம்மா இப்போ நீ என் காதலை ஏற்றுக் கொள்கிறாயா சொல்லு" என்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணம்மா நிற்கின்றார். 


Advertisement

Advertisement