• Jul 26 2025

கண்ணீர் வடிக்கும் ஆதிரை.. ஏமாற்றத்தில் வீராப்புடன் பேசும் விசாலாட்சி.. பதிலடி கொடுத்த அப்பத்தா.. இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் குணசேகரன் இந்த நிச்சயம் நடக்காது என உறுதியாக சொல்ல எஸ் கே ஆர் குடும்பம் அங்கிருந்து வெளியேறியது. 


அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும், அந்த திருமணம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் ஆதிரை விம்மி விம்மி அழுகின்றார். அதைப் பார்த்த விசாலாட்சி  "மனுஷங்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும்" என கண்ணீர் வடித்தவாறு வீராப்புடன் கூறுகின்றார். அதற்கு அப்பத்தா "பேசி முடிச்சிட்டியா" எனக் கேட்டு பதிலடி கொடுக்கின்றார். 


மேலும் ஜனனி சாருலதா மேடமிற்கு போன் பண்ணுகிறார். அதற்கு அவர் இனிமேல் பேசுறதற்கு என்ன இருக்கு ஜனனி எனக் கேட்டு போன் அழைப்பைத் துண்டித்து விட்டனர்.  இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. இனி நடக்கப் போவது என்ன என்பதை எபிசோட்டின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

Advertisement