• Jul 25 2025

எதிர்பாராத நேரத்தில் தாலி கட்டிய சூர்யா... அதிர்ச்சியில் வெண்ணிலா... ஆடிப்போன குடும்பம்... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் "வெண்ணிலா கோவிலில் ஆழ்ந்த தியானத்தில் இருந்து சாமி கும்பிடுகின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த சூர்யா எதிர்பாராத நேரத்தில் வெண்ணிலாவிற்கு தெரியாமலே அவர் கழுத்தில் தாலி கட்டுகின்றார்.


கண் விழித்துப் பார்த்த வெண்ணிலா தனது கழுத்தில் சூர்யா கட்டிய தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகின்றார். அதுமட்டுமல்லாது சூர்யா குடும்பம், வெண்ணிலாவின் அம்மா, அப்பா அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இதனையடுத்து வெண்ணிலா எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement