• Jul 24 2025

யோகிபாபுவுக்கு நான் தான் ராஜா என்ற நினைப்பு அவரு வந்தால் தான் தெரியும் - சர்ச்சையைக் கிளப்பிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, காமெடியை தாண்டி சில படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏற்கனவே இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'மண்டேலா' திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும், விருதுகளையும் குவித்த நிலையில்,இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் பொம்மை நாயகி.இயக்குநர் பா ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்ஷன் மூலம்  இப்படத்தை தயாரித்துள்ளார்.


 இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது அந்த வகையில் அண்மையில் இப்படத்தின ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு மிகவும் எதார்த்தமான கதாபாத்திரங்களோடு உருவாக்கியுள்ள இப்படம் யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் யோகிபாபு மீது பிரபலம் ஒருவர் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அதாவது யோகிபாபு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது ஒவ்வொரு மீடியாகாரர்களையும் பார்த்து நீ எந்த சேனல் என்று ஒருமையில் பேசியதோடு கிண்டலாகவும் பேசியிருந்தார். அத்தோடு பொதுவாகவே காமெடியனாக இருப்பவங்க எல்லோருக்குமே இப்படி ஒரு திமிர் இருக்குது.

தமிழ் சினிமாவில் தற்பொழுது சூரி ஹுரோ ஆகிட்டாரு சதீஷும் ஹீரோ ஆகிட்டாரு. இதனால இவருக்கு போட்டி இல்லை அதனால தான் எல்லா படத்திலும் தானே கமிட்டாகி நடித்து வருவதால் நான் தான் ராஜா என்ற நினைப்பில இருக்காரு. சந்தானம் திரும்ப காமெடியனாக ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார்.


அவர் திரும்ப வந்து ஹிட்டுக் கொடுத்தால் தான் யோகிபாபுவின் கெரியர் ஆட்டம் காணும். சினிமாவைப் பொறுத்த வரைக்கும் யாரு எப்போ எப்பிடி மாறுவாங்க என்று தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement