• Jul 24 2025

நீ என்னம்மா ஆடி மாசத்திற்கு கூழ் ஊத்திற மாதிரி வந்திருக்கிற- தொகுப்பாளினி டிடியைக் கலாய்த்த சந்தானம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சந்தானம், சமீப காலமாக நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு முழு நேர ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்களில் சில வெற்றிகண்டாலும், பெரும்பாலான படங்கள் தோல்வியை தான் தழுவின. 

இதனால் மீண்டும் காமெடியனாகவே நடிக்க சந்தானம் திட்டமிட்டு வருவதாக செய்திகளும் வெளியாகின.இதனை உறுதி செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் சந்தானம். 


அவர் இப்படத்தில் காமெடி காட்சிகளும் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதற்காக ரூ.10 கோடி வரை சந்தானம் சம்பளம் பேசி கமிட் ஆன நிலையில், இறுதியில் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதால், சந்தானமும் அப்படித்தில் நடிக்க முடியாமல் போனது.தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை 4 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் சந்தானம் சில வருடங்களுக்கு முதல் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் சந்தானம் நான் எல்லா ஹீரோவோடும் நடிக்கும் போது ஈசியாக கனெக்ட் ஆகிடுவேன். ஆர்யாவை மச்சான் என்று சொல்வேன். ஜீவாவை ப்ரோ என்று சொல்வேன் ஆனால் உதயநிதியை முதலாளி என்றுதான் கூப்பிடுவேன். அவரும் என்னை அப்படித் தான் அழைப்பார் என்று சொன்னார்.


மேலும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடியிடம் நீ என்னம்மா ஆடி மாசத்திற்கு கூழ் ஊத்திற மாதிரி எல்லாம் மஞ்சள் கலரிலேயே வந்திருக்கிற என கேட்டு கலாய்த்துள்ளார். 


Advertisement

Advertisement