• Jul 24 2025

காலில் பலத்த விபத்து ஏற்பட்டாலும் டைட்டில் வின்னர் ஆன தம்பியை நேரில் சென்று பார்த்த நடிகை சைத்ரா ரெட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.இந்த சீரியலில் இவர் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டதால் கன்னட சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். இதன் மூலமே சீரியல் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்


இவருக்கு தம்பியாக கயல் சீரியலில் நடித்து வந்தவர் தான் அவினாஷ்.இவருக்கு அண்மையில் நடந்த விபத்தில் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது .சைத்ரா ரெட்டி அவரை நேரில் பார்க்க மேலும் அவருடன் சிரித்து பேசியும் மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவினாஷ் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement