• Jul 25 2025

நானியின் 30வது படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்.. என்ன ஹாரக்டரில் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பான் இந்திய திரைப்படமான தசரா படத்தில், நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி ஆகியோர் லீட்ரோலில் நடித்திருந்தனர்.கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் சில காட்சிகள் ரியலாக வரவேண்டும் என்பதற்காக சில காட்சியில் நானி ரியலாக குடித்துவிட்டு நடித்திருந்தார். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான தசரா படம் வசூலை அள்ளியது. இப்படம் நானியின் திரைவாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையை இத்திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.

தசரா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 30வது படத்தில் நானி நடித்து வருகிறார். வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஸ்ருதிஹாசன் பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement