• Jul 24 2025

சமந்தாவைத் தொடர்ந்து... சோபிதாவையும் பிரிந்த நாக சைதன்யா... வெளியான ஷாக்கிங் நியூஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

காதலித்து கல்யாணம் பண்ணிய நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றமை நம் அனைவருக்கும் தெரியும்.


நாக சைதன்யாவை பிரிந்துவிட்டாலும் சமந்தா அவரின் தம்பி அகில் அக்கினேனியுடன் இன்றுவரை நட்பாகவே பழகி வருகின்றார். இருப்பினும் சமந்தாவும் நாக சைதன்யாவும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது தமது சினிமாக் கேரியரை முன்னெடுத்து செல்கின்றார்கள்.


மேலும் சமந்தாவைப் பிரிந்ததை அடுத்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசுக்கள் அடிக்கடி வெளிவந்த வண்ணமே இருந்தன. அதுமட்டுமல்லாது தனது தந்தையை போலவே நாக சைதன்யாவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனவும் கூறப்பட்டது.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலா இருவரும் தற்போது பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டதாகவும், சமீப காலமாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.


அத்தோடு இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லை எனவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement