• Jul 25 2025

இந்த நடிகர்கள் எல்லாம் சினிமாவை விட்டே விலக வேண்டும்... அதிரடியாகக் கூறிய சிரஞ்சீவி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி வாய்ந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் குறிப்பாக 10 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் படப்பிடிப்பில் கடும் குளிரில் ஒரு காட்சியில் நடித்து இருந்தார். 


இதனைத் தொடர்ந்து இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தில் நடிக்க வேண்டுமா? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து சிரஞ்சீவி கூறும்போது, "கஷ்டப்பட்டுத்தான் நடிக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் அந்த படத்துக்கு 100 சதவீதம் நியாயம் செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாது "கஷ்டத்தை பார்த்து யாருமே வருந்தக்கூடாது. எமக்குள் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது. கொடுத்த காட்சியில் நடித்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே சினிமாவில் இருக்க அருகதை உண்டு. அப்பிடி கஷ்டப்பட்டு நடிக்க விருப்பம் இல்லையேல் வீட்டுக்கு போய் விடலாம். அவர்கள் நடிப்பதற்கு அருகதையற்றவர்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார். 


அத்தோடு "நடிப்பில் புகழ், பெயர் சும்மா வராது. கஷ்டப்பட வேண்டும். கதாபாத்திரங்களுக்காக நடிகர்கள் பசியோடு இருக்க வேண்டும். நடிப்பு பசி செத்து விட்டால் சினிமாவை விட்டே போய் விடவேண்டும். நான் கஷ்டமான காட்சிகளிலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் மாடுபோல் உழைப்பேன். திரையில் என்னை பார்க்கும் ரசிகர்கள் கைதட்டலில் கஷ்டப்பட்டது எல்லாமே மறைந்துவிடும்'' எனவும் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement