• Jul 25 2025

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து உருவாகும் அடுத்த சரித்திரப் படம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் தற்போது சரித்திரப் படங்களுக்கான மவுசு ஆனது எரிய வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக பாகுபலி படத்துக்கு பிறகுதான் இவ்வாறான சரித்திர படங்கள் அதிகம் தயாராகின்றன. 

அதுமட்டுமல்லாது சமீபத்தில் கூட திரைக்கு வந்த தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றியும் சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. 


இந்த நிலையில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கத் தயாராக உள்ளனர். அந்தவகையில் இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மாராத்தி மொழியில் தயாராகிறது. அதுமட்டுமல்லாது இதர மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.


மேலும் வீர சிவாஜியாக நடிப்பது குறித்து அக்‌ஷய் குமார் கூறும்போது "சத்ரபதி சிவாஜி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜ் தாக்கரேயால் தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது.

பழம்பெரும் ஆளுமையான மராட்டிய மன்னன் கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு என்னால் முடிந்த கடின உழைப்பை இறுதி வரைக்கும் கொடுப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement