• Jul 25 2025

முக்கியமான ஒரு நபருக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- இதனால் தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி ப்ரியங்கா. இவர்  நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர். 


இவர் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழாததால் விவகாரத்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகும். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரியங்கா தனக்கு பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 


இது தவிர பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.ஆரம்பத்தில் ஒருசில நிகழ்ச்சிகள் நடந்திவந்த இவர் இப்போது இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்றாகிவிட்டது.விஜய் டிவி பக்கம் போனாலே இவர் மற்றும் மாகாபா இருக்கிறார்கள்.


பிரியங்கா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது அம்மாவிற்கு நன்றி கூறியிருக்கிறார், தனக்காக சமைத்து கொடுத்த அம்மாவிற்கு நன்றி என கூறி எமோஷ்னலாக பேசியுள்ளார்.




Advertisement

Advertisement