• Jul 25 2025

பிரேக் அப் ஆகிட்டா அதைப் பண்ணவே கூடாது- நடிகர் ஜெய் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜெய். இவர் 2002 -ம் ஆண்டு வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து பல வித்தியாசமான காமெடி படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.அத்தோடு இவர் நடிப்பில் கடந்த ஆண்டு குற்றமே குற்றமே, வீரபாண்டிய புரம், பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, காபி வித் காதல் என்று ஐந்து படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படமும் வெற்றி பெற வில்லை.


ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது. ஆனால் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது. 


இந்த நிலையில் தீராத காதல் என்னும் திரைப்படத்தில் ஜெய் நடித்திருந்தார். இப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் ஜெய் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் காதல் பிரேக் அப் ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை அப்படியே விட்டு கடந்து போகப் பழகனும். அதற்காக நம்மளையே வருத்திக் கொள்ளக் கூடாது . இது கிடைக்காது என்றால் அடுத்து நம்ம வேலையைப் பார்க்க வேண்டியது தான் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement