• Jul 25 2025

ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. பிறந்த குழந்தையை பார்த்த அழகான தருணம்..வெளியானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

தான் லஞ்சம் வாங்கவில்லை என கண்ணன் கூறியும் அதை யாரும் நம்பவில்லை. கண்ணனின் அண்ணன் மூர்த்தி கூட இதை நம்பவில்லை.

இந்நிலையில், வரும் வாரம் கண்ணனை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார்கள். வீட்டுக்கு வந்த கண்ணன் தனது அண்ணன் மூர்த்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

ஆனாலும், மூர்த்தி மன்னிக்கவில்லை. இதன்பின் தனக்கு பிறந்த குழ்நதையை தூக்கி கொஞ்சுகிறார் கண்ணன்.

குழந்தை பிறக்கும் சமயத்தில் கூட தன்னால் இருக்க முடியவில்லையே என கண்கலங்கி வருத்தப்படுகிறார். 


Advertisement

Advertisement