• Jul 26 2025

சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

கார்த்தி தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பருத்தி வீரன் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.மேலும் அதனைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் என பல திரைப்படங்களில் நடித்தார்.


இதன்  மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.மேலும் இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்ற பல விருதுகள் வென்றுள்ளார்.


மேலும் கார்த்தி மணிரத்னம் இயக்கி அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் இப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. மேலும் இவரின் நடிப்பால் பரவலாக பேசப்பட்டார். 


இந்நிலையில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சர்தார் மாபெரும் வெற்றி பெற்றது. தீபாவளி ரேஸில் சர்தார் படம் அமோக வெற்றியை பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.


தற்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலை பரிசாக வழங்கி உள்ளார் கார்த்தி. அதில் என்ன ஸ்பெஷல் என்றால் அந்த பாட்டில் வெள்ளியால் ஆனதாம். கார்த்தி அளித்த இந்த விலையுயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. கார்த்தியின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.


Advertisement

Advertisement