• Jul 24 2025

பிரசித்தி பெற்ற கோயிலில் சாமி தரிசனம் செய்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி- காரணம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.இது தவிர கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார். தற்போது காதல் கண்டிசன் அப்ளே என்ற படத்தையும் வினியோகம் செய்ய உள்ளார்.


இவர் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.


இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் திருச்சி ஶ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 கோயில் யானையிடம் ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமி பகிர்ந்துள்ளார்.இதனால் இப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் தைமது லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement