• Jul 25 2025

கார்த்திக்கினால் பேச்சு மூச்சின்றி இருக்கும் சுந்தரியின் அம்மா- விடாமல் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும் அனு

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கார்த்திக் சுந்தரியையும் அனுவையும் திருமணம் முடித்திருக்கும் விடயம் கார்த்திக்கின் அப்பாவிறகு தெரிந்து விட்டதால் அவர் இறந்து விட்டார். இதனால் கார்த்திக்ககின் அம்மா கார்த்திக் மீது சரியான கோபத்தில் இருப்பதோடு சுந்தரி பக்கமே இருந்து வருகின்றார்.


இதனால் சுந்திரியின் மாமா முருகன் சுந்தரியின் அம்மா எல்லோருக்கும் கார்த்திக் மீது சந்தேகம் வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அனுவிடம் பொய் சொல்லி விட்டு கார்த்திக் தனது அப்பாவின் கடமையைச் செய்வதற்காக சுந்தரி வீட்டிற்கு வந்த விடயமும் அனுவுக்கு தெரிந்து விட்டது.இதனால் அனு சுந்தரி வீட்டுக்கு வருகின்றார்.


இப்படியான நிலையில் கார்த்திக்கிடம் தன்னுடைய மகளுக்காக ஞாயம் கேட்டு நின்ற சுந்தரியின் அம்மா திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனால் சுந்தரி தன்னுடைய அம்மா கண் முழிக்கவில்லை என ஹாஸ்பிட்டலில் இருந்து புலம்புகின்றார்.மேலும் அனுவிடம் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார் கார்த்திக். இதனால் அனு சுந்தரியின் வீட்டுக்கே நேராக போய் கேட்கலாம் வா என்று அழைக்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement