• Jul 25 2025

கண் தெரியாத சிறுமியின் கதையைக் கேட்டு மனம் உடைந்த நடுவர்கள்.. கண் கலங்கி அழுத பெற்றோர்... 'சூப்பர் சிங்கர்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதில் கண் தெரியாத சிறுமி ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். அவர் குறித்த வீடியோ ஒன்று ஒளிபரப்படுகின்றது. அதில் அவர் பேசுகையில் "இந்த உலகத்தை என்னால் பார்க்க முடியாது என்று நான் பீல் பண்ணினதே கிடையாது, ஏனெனில் என் பாட்டு வழியாக நான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன்" எனக் கூறுகின்றார். 


மேலும் "எனக்கு என் அக்கா தான் இன்னொரு கண்ணாக இருக்கின்றார்"  எனவும் கூறுகின்றார். அதற்கு இசையமைப்பாளர் தமன் இந்த உலகத்தைப் பார்த்துடலாம் கவலைப்படாதே என்கிறார். இதை எல்லாம் கேட்டதும் அந்த சிறுமியின் தாய், தந்தை இருவரும் கண் கலங்கி அழுகின்றனர்.

இவ்வாறாக இந்த வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement