• Jul 24 2025

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு- ஜெயம் ரவியின் புதிய படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்து ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளார். இந்தப் படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது.

இதனை அடுத்து இவரது நடிப்பில் தற்பொழுது அகிலன் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிததுள்ளார்.


 இந்த படத்தை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் ரிலீஸ் காரணமாக வெளியீடு கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரெடக்சன் மற்றும் புரொமோஷன் பணிகள் காரணமாக வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் அகிலன் படத்துடைய டிஜிட்டல் வெளியீட்டு உரிமம் மிகப்பெரும் தொகைக்கு பிஸ்னஸ் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.இந்த படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement