• Jul 24 2025

லோன் கேட்டுப் போன பாக்கியாவுக்கு கிடைத்த அவமானம்- திமிரில் கோபியுடன் சேர்ந்து ஆட்டம் போடும் ராதிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம். காலணி எலக்சனுக்காக ராதிகா பேசி முடித்த பின்னர் ராதிகாவும் பாக்கியாவும் எதிர் எதிர் திசையில் செல்கின்றனர்.

தொடர்ந்து வீட்டில் ஜெனிக்கு மாதுளம்பழத்தை எப்படி உடைத்து சாப்பிடுவது என செழியனும் பாட்டியும் இருந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்க அங்கு வேகமாக ஓடி வரும் செல்வி பாக்கியவாவிற்கு எதிராக எலக்சனில் ராதிகா நிற்கப்போவதாக கூறுகின்றார்.


இதனால் அனைவரும் அதிர்ச்சியடைய அங்கு வரும் எழிலும் பாக்கியாவும் செல்வி சொல்வது உண்மை என்கின்றனர்.அத்தோடு கோபி பாக்கியாவை அசிங்கப்படுத்திய விடயத்தை கூற செழியன் கடுப்பாகி அம்மா என்னோட சர்ப்போட் உனக்கு தானம்மா என்கிறார்.ஈஸ்வரி இதெல்லாம் சரிப்பட்டு வருமா என பேச பாக்கியா அவரை சமாதானம் செய்கின்றார்.

தொடர்ந்து பாக்கியா லோன் வாங்குவதற்காக ஒரு பாஃங்கிற்கு செல்கின்றனர். ஆனால் லோன் கிடைக்கவில்லை. இதனால் தன்னுடன் சமைப்பவர்களை அழைத்து என்ன செய்யலாம் என்று கேட்கிறார். அவர்களிடம் இருந்தும் சரியான முடிவு எதுவும் கிடைக்கவில்லை.


இதனால் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கிறார். தொடர்ந்து இனியாவிடம் பேசிட்டு இருக்கும் தாத்தா பாக்கியாவுக்காக நோட்டீஸ் அடிக்கப் போவதாகவும் பெனர் வைக்கப் போவதாகவும் கூற கடுப்பான கோபி அவரைத் திட்டுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement