• Jul 25 2025

தன்னை கல்யாணம் பண்ணச் சொல்லும் விஜய்- அதிர்ச்சியில் உறைந்த காவேரி- நர்மதாவுக்காக எடுக்கப்போகும் முடிவு என்ன?- Mahanadhi Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் நர்மதாவின் ஆப்பிரேஷனுக்கான குமரனின் எக்கவுண்டில் பணம் சேர்த்து வைத்தனர்.ஆனால் யாரோ அந்த பணத்தை எக்கவுண்டில் இருந்து திருடி விட்டதால் நர்மதாவின் ஆப்பிரேஷனுக்காக பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.


இதனால் காவேரி விஜய்யிடம் சென்று நர்மதாவின் ஆப்பிரேஷனுக்கு பணம் வேண்டும். எங்களை வீட்டை விட்டு அனுப்பிடாதீங்க என்று சொல்கின்றார்.அப்போது விஜய் ஆப்பிரேஷனுக்கான பணத்தை நான் தருகின்றேன். அதுக்காக நீ ஒரு வருஷத்திற்கு மட்டும் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கனும் என்று சொல்கின்றார்.

இதைக் கேட்டு காவேரி அதிர்ச்சியடைகின்றார். இருந்தாலும் நர்மதாவுக்காக விஜய்யை திருமணம் முடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement